Thursday, February 22, 2007

தாகம்

அவனுக்கு வேட்கை
எடுத்த போதெல்லாம்
வரிசையாக நின்ற
அவைகளில்
"இன்னிக்கு இது வேணும்" என்று
சுட்டிக்காட்டி
அதன் நிறத்தில்
மனதைப் பறிகொடுத்து
பளிங்கு மேனியை அணைத்து
முரட்டுப்பிடியில்
அடக்கி வைத்த உணர்ச்சிகளை
காற்றாய் விடுவித்து
முழுதுமாக அனுபவித்து
வேட்கையை தணித்துக்
கொண்டபின்
பணத்தை கையில்
அள்ளி கொடுக்கையில்
"ரொம்ப நல்ல சரக்கு
நாளைக்கும் இதே குடுங்க"ன்னு
சொல்லிவிட்டு
நகர்ந்த போது
சக்தியெல்லாம் போய்
உணர்ச்சிகளில்லாமல்
காலியாய் நின்றிருந்த
அந்த
"குளிர்பான புட்டி".

0 comments: