Wednesday, February 14, 2007

மெளன மொழிகள்

எழுதியவர்: யாழினி அத்தன்

நீ பேசும் மொழி என்னவென்று
எனக்குத் தெரியாது...
நான் பேசும் மொழியும்
உனக்குப் புரியாது...
ஒவ்வொரு முறை
நம் கண்கள்
சந்தித்த போதெல்லாம்
நம் இதயங்கள்
கலந்துரையாடின...
அருகில்
சுற்றித்திரிந்த அறிவு
எங்கோ சந்திடுக்கில்
ஒளிந்து கொண்டது...
என் முன்னே நீ
இல்லாத போதெல்லாம்
இதயம் அறிவிடம்
சிறைபட்டுக் கொண்டது...
இவையிரண்டும் நடத்திய
அந்த மெளனப் போர்
முடிவில்லாத
ஈரான் - ஈராக் போர்...
ஒருவேளை
இதயம் வென்றிருந்தால்
காதல் வென்று
நம் மொழிகள்
சங்கமித்திருக்க வேண்டும்...
இல்லையேல்
அறிவு வென்று
நான் உன்னை முழுதுமாக
மறந்து போயிருக்க வேண்டும்...
இரண்டும் நடக்கவில்லை..
.......................................
இப்போது
நீ எங்கோ... நான் எங்கோ...
காலம் மறக்கடித்த
அந்தப் போர்...
மறக்காமல் நினைவூட்டும்
அதன் தழும்புகள்...

2 comments:

Anonymous said...

சுவையான காதல் நிகழ்வுகள்

வாழ்த்துக்கள்

-சுந்தர்

Anonymous said...

Wonderful Kavithai!Brings out the messy middle between the heart and the brain. Please continue bringing out more and more Kavithaigal

anbudan
Balaji