Wednesday, January 6, 2010

நீ வருவாயென


ஒரே பக்கத்தை பத்து முறை
புரட்டிவிட்டேன்
நீ எங்கு இருக்கிறாய்?

நடக்கும் பாதையை
பார்த்து சலித்துவிட்டேன்
பரவியிருந்த நறுமணக்
கவழல் மரித்து நாளாகிவிட்டது

ஊர் கதைகள் மென்றபடி
தலை விலக்கி நோக்கினால்
மெதுவாய்ப் பயணிக்கிறார்கள்
உன் தோழிகள்

மிதிவண்டி
இப்படியும் அப்படியும்
செல்கிறது
உன் தங்கை
அனாசயமாக ஓட்டுகிறாள்

ஒரு வலிக்கு மருந்து
இன்னொரு காயம்
என்று சொல்கிறார்கள்
நீ இருந்ததைவிட
இப்போது அதிகமாய்
வலிக்கிறது என்று
தெரியாமல்.

பொறுமையாய் காத்திருக்கிறேன்
ஒரு குறிஞ்சிப் பூவைப்போல.
ஏனெனில்
நிஜசாயம் பூசப்பட்ட
பொய் பொம்மைகள்
வெளிறிவிடும் ஒருநாள்
என்ற நம்பிக்கையில்.

கிறுக்கன் என்று
கைசுட்டுவதில்லை
யாரும் இப்போதெல்லாம்!