Monday, February 19, 2007

காவிரி போற்றுதும்...காவிரி போற்றுதும்...

("மார்ச் 2007, இதழ் 87 "பதிவுகள்" இதழில் வெளியான கவிதை)

காவிரி மங்கை
சேலை கிழித்து
மானபங்கபடுத்தப்பட்டாள்...
சோழர்
புலிக் கொடிகள்
பறந்த திசைதிக்கும்
எலிக்கறி தின்ற
சோகங்கள்...
காவிரி வற்றிய
போதெல்லாம்
கர்நாடகத் தமிழர்
தாங்கிக் கொண்ட
அடிகளும், வலிகளும்...
வழிந்தோடிய அவரின்
கண்ணீரில் மட்டும்
நாம் வருடங்கள்
பயிர் செய்திருக்கலாம்...
ஆனால்,
சாமான்ய தமிழா!
நீயோ சலனமற்று கிடக்கிறாய்...
உன் வீட்டு
மங்கையரின் உணர்வுகள்
தொலைகாட்சி சீரியலில்
பறி போய்க் கொண்டிருக்கிறது...
உன் வீட்டு ஆடவரின்
உணர்வுகள் கிரிக்கெட் தொடரில்
பறி போய்க் கொண்டிருக்கிறது...
பொறுத்திரு!
சுவாசிக்கும் காற்றை
எந்த திசையிலிருந்து பெறுகிறாய்?
நாளை அதையும்
யாராவது
உரிமை கோர
வரக்கூடும்...
அந்த வேளை
சினிமா கொட்டகையில்
தமிழறியா நடிகையின்
குத்தாட்டத்தில்
உன் உணர்வுகள்
பறி போகக்கூடும்...

வேங்கைத் தமிழர்..
அது வரலாறு...
என் பிள்ளை
கதை கேட்பான்
தூங்கும் நேரத்தில்!


http://www.geotamil.com/pathivukal/poems_march2007_yazini.htm

3 comments:

Anonymous said...

உணர்ச்சிப் பிழம்பான கவிதை.

காதல் கவிதைகள் மலிந்து கிடக்கும் இந்த நேரத்தில் இந்த மாதிரியான கவிதைகள் மிக அவசியம்.

Anonymous said...

சோழர்
புலிக் கொடிகள்
பறந்த திசைதிக்கும்
எலிக்கறி தின்ற
சோகங்கள்...

What a line? Brought tears in my eyes.

said...

anani, sundar...

ungal iruvarin comments-kkum nanri