Thursday, February 15, 2007

புத்தன் என்றொரு சாமுராய்

எழுதியவர்: யாழினி அத்தன்

அறியாமை போர்வையின்
கறுப்புத் திரையை கிழித்தெறிய
புத்தன் ஏந்தியதோ
'வைர வாள்" மகாசூத்திரம்...

ஆயிரம் நெஞ்சங்களை
அது பிளந்திருந்தும்
ஆண்டுகளுக்கு முன்னிருந்த
அதே பளபளப்பு
இன்னும்
ஒரு சொட்டு கூடக் குறையாமல்...

இரக்கம் என்ற சொல்லுக்கு
அவன் அகராதியில் அர்த்தமில்லை...

ஒரு குழந்தையைப் போல
கைகட்டி
அவன் முன்னே நின்றாலும்
தப்பாமல் பாய்ச்சிடுவான்
வாளினை உன்
இதயச் சுவற்றினுள்ளே...

சந்தேகம் வேண்டாம்!
ஒரு இடியை காட்டிலும் பலமாக
ஒரு மின்னலை காட்டிலும் வேகமாக
இறங்கும் உனக்குள்ளே ஒரு சக்தி...
இதயம் இரண்டாக மனம் மருண்டோட
சத்தமில்லாமல்
நீயும் செத்துப் போவாய்!

ஆனால்....ஆனால்...பேரதிசயம்
ஒன்று உனக்காக காத்திருக்கும்...

எந்த கணம் சிறுமனிதனாய் இறப்பாயோ
அதே கணம் ஒரு ஞாநியாய் பிறப்பெடுப்பாய்...
எந்த கணம் உன் சிற்றிதயம் பிளக்கப்பட்டதோ
அதே கணம் ஒரு செந்தாமரையாய் மலரும்...
பயந்து ஓடிப்போன உன் குரங்கு மனம்
அருவியில் குளித்த அழகு மானாய் திரும்பும்...
கண்களில் சலித்துப்பெடுத்துப்போன
இந்த உலகம் ஒரு அபூர்வ மரமாய் சுடர்விடும்...
செவிகள் கேட்ட இரைச்சல் சத்தங்கலெல்லாம்
சங்கீதம் நிறைந்த சாகரங்களாகும்...
உழைத்து சளைத்துப்போன உன் தேகமோ
உணர்வுகள் செறிந்த ரோஜா மலராகும்....
பிருதுவில் ஒளிந்திருந்த கடவுளின் இரகசியத்தை
தெரிந்து அனுபவித்து இன்புறுவாய்!

வாழ்க்கையைப் புறக்கணித்து
வழிதேடச் சொன்ன
துறவிகள் நடுவினிலே
"வைர வாள்" கொண்டு
புதிதாய் பிறக்கச் செய்து
வாழ்க்கையை "முழுதாய்"
உணரச் சொன்ன
புத்தன் ஒரு மகா "சாமுராய்"!

சாமுராய் - போர் வீரன்

2 comments:

said...

One can see God while still engaged in one's worldly duties. It is not necessary to renounce. The diamond studded sword of experience slashes through the ego and allows the mind to perceive Reality

said...

Good that you read the poem in detail. The poem was based on Buddha's sutra called "The Diamond Sutra", proposed in Srabasti (present day Saketh-Maketh, Bihar) some 2500 years ago. When I mention "சத்தமில்லாமல் நீயும் செத்துப் போவாய்" in the poem, it is nothing but the ego. He also says that rather than killing your senses, be alert and aware always using them. Hence I wrote this poem thinking that might of interest to some at least.