இசைஞானிக்கு என் சமர்ப்பணம்

ஆள் அரவமில்லாத
அடர்ந்த காட்டுக்குள்ளே
திக்குத் தெரியாமல்
அலையும் ஊதக்காற்றிற்கு
உன் புல்லாங்குழல்தானே
முகவரி தந்தது.
தப்பை மூங்கிலுக்குள்ளே
காற்றின் நர்த்தனம்.
உருவெடுத்த இசைக்கு
உயிர் கொடுத்தது
நீயா? நானா? என்ற
அறியாமைச் சண்டைவேறு
நீயில்லாத நேரத்தில்!
முறுக்கேறிய கம்பியிழைகள்
இளமை ததும்பும்
புதுக்காதலி போல
மரப் பேழையோடு
வெட்கம்விட்டு
கொஞ்சி குலாவ
உருவான பாட்டுகளில்
சொக்குகின்ற காதல்ரசங்கள்!
உன் தாலாட்டுகளில்
உறங்கிப்போன குழந்தகளெல்லாம்
இன்று
தத்தம் குழந்தைகளை
உறங்க வைக்க
அதே தாலாட்டை
தேடி அலையும்
ரகசியம் சொல்வாயோ?
சோகம் சுமந்து
சாகும் மனிதனெல்லாம்
உன் கீதங்களை
கேட்டு
மனக் கவலைகளை
தூர வீசிவிட்டு
சிரித்துக் கொண்டுதானே
சாகின்றான்.
அன்றாடங் காய்ச்சிக்கு
பாதி வயிறு
நிரம்பிய நாட்களிலே
உன் பாட்டுத்தானே
மீதி வயிற்றை
நிரப்பும்.
உருகாத மெழுகாய்
நின்ற
கர்நாடக ராகங்கள்
உன் இசையொளி
முன்னால் உருகிப்போக
அதனால்
ஒளி பெற்றதென்னவோ
எம்
தமிழ்நாட்டு கிராமங்கள்தான்.
உன் ஓராயிரம்
பாட்டுகளை ஓயாமல்
ஒலித்து மகிழ்ந்த
ஒலிப் பேழைகளெல்லாம்
தன் வாய்வலித்து
மறந்ததைக் கூட
எவரிடமும் சொல்வதில்லை!
சிம்பொனித் தமிழனே!
எங்கள் பயணங்கள்
எங்கே முடியுமோ
அதுவரை
கொண்டு செல்லும்
எங்கள் இதயத்தோடு
ஒட்டிப் போன
உன் அதிர்வலைகள்!
12 comments:
அற்புதம்! வார்த்தைகளில்லை!
வந்து போனதுக்கு நன்றி சாரதா!
யாழினி அத்தன்
மிகவும் அருமை.
ஒவ்வொரு வரியையும் அனுபவித்துப் படித்தேன்
http://vigneshram.blogspot.com/2009/06/66-years-young.html
Simply Superb.Thanks.
Bhupathi
மிகஅற்புதம்!
Vignesh Ram,
Thanks for visiting. Trouble with my Unicode. So typing in English.
Well. After I wrote, I realised it was his birthday today. Great timing though!
thanks for visiting, bhupathi
Senthildasan,
Thanks a bunch for visiting.
I am one his die-hard fans.
best
//
உன் தாலாட்டுகளில்
உறங்கிப்போன குழந்தகளெல்லாம்
இன்று
தத்தம் குழந்தைகளை
உறங்க வைக்க
அதே தாலாட்டை
தேடி அலையும்
ரகசியம் சொல்வாயோ?//
அருமை நண்பரே... அழகுக் கவிதை சமர்ப்பணம்... ராஜாவுக்கு வாழ்த்துக்கள்...
பாராட்ட வார்த்தைகளே இல்லை...ஒவ்வொரு வரியும் படிக்கும் போது மனதுக்குள் எழுந்த உற்காசத்தை என்னென்னு சொல்ல!!! ;)
அட்டகாசமான சமர்ப்பணம் ;)
நேரம் கிடைக்கும் போது என்னோட சமர்ப்பணத்தையும் பாருங்கள் ;)
இசைக்குப் பிறந்த நாள் http://gopinath-walker.blogspot.com/2009/06/blog-post.html
தமிழ்ப் பறவை,
உங்கள் வருகைக்கும், மறுமொழி தருகைக்கும் நன்றி!
கோபிநாத்,
உங்களுடைய பாராட்டுகளெல்லாம் இசைஞானியை சேரட்டும். அவரே அதற்கு முழு தகுதியானவர்.
உங்கள் வருகைக்கு நன்றி நண்பரே!
Post a Comment