Sunday, May 31, 2009

இசைஞானிக்கு என் சமர்ப்பணம்


ஆள் அரவமில்லாத
அடர்ந்த காட்டுக்குள்ளே
திக்குத் தெரியாமல்
அலையும் ஊதக்காற்றிற்கு
உன் புல்லாங்குழல்தானே
முகவரி தந்தது.

தப்பை மூங்கிலுக்குள்ளே
காற்றின் நர்த்தனம்.
உருவெடுத்த இசைக்கு
உயிர் கொடுத்தது
நீயா? நானா? என்ற
அறியாமைச் சண்டைவேறு
நீயில்லாத நேரத்தில்!

முறுக்கேறிய கம்பியிழைகள்
இளமை ததும்பும்
புதுக்காதலி போல
மரப் பேழையோடு
வெட்கம்விட்டு
கொஞ்சி குலாவ
உருவான பாட்டுகளில்
சொக்குகின்ற காதல்ரசங்கள்!

உன் தாலாட்டுகளில்
உறங்கிப்போன குழந்தகளெல்லாம்
இன்று
தத்தம் குழந்தைகளை
உறங்க வைக்க
அதே தாலாட்டை
தேடி அலையும்
ரகசியம் சொல்வாயோ?

சோகம் சுமந்து
சாகும் மனிதனெல்லாம்
உன் கீதங்களை
கேட்டு
மனக் கவலைகளை
தூர வீசிவிட்டு
சிரித்துக் கொண்டுதானே
சாகின்றான்.

அன்றாடங் காய்ச்சிக்கு
பாதி வயிறு
நிரம்பிய நாட்களிலே
உன் பாட்டுத்தானே
மீதி வயிற்றை
நிரப்பும்.

உருகாத மெழுகாய்
நின்ற
கர்நாடக ராகங்கள்
உன் இசையொளி
முன்னால் உருகிப்போக
அதனால்
ஒளி பெற்றதென்னவோ
எம்
தமிழ்நாட்டு கிராமங்கள்தான்.

உன் ஓராயிரம்
பாட்டுகளை ஓயாமல்
ஒலித்து மகிழ்ந்த
ஒலிப் பேழைகளெல்லாம்
தன் வாய்வலித்து
மறந்ததைக் கூட
எவரிடமும் சொல்வதில்லை!

சிம்பொனித் தமிழனே!

எங்கள் பயணங்கள்
எங்கே முடியுமோ
அதுவரை
கொண்டு செல்லும்
எங்கள் இதயத்தோடு
ஒட்டிப் போன
உன் அதிர்வலைகள்!

12 comments:

said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by the author.
said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by the author.
said...
This comment has been removed by the author.
said...
This comment has been removed by the author.
said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by the author.