Wednesday, June 3, 2009

புகைத்தலின் பெண்மை


அன்று
தொலை நிலவாய்
தூர நின்று சிரித்தாய்
பின்
கொளுத்தெரிந்த என்
காம இச்சைக்கு
பலியானாய்

இன்று
நாளற உனை
பத்துமுறையாவது
முத்தமிடுகிறேன்
சில நேரம்
என் சொந்தக்
காதலி
முன்னாலே
இருந்தாலும்
போதவில்லை

மறந்துவிட அவள்
இறைஞ்சியும், அழுதும்
மறுத்துவிட்டேன்
தீர்க்கமாய்
உனை மறக்க

அடுத்தவனுக்கில்லை
என்னின்பம் என்று
அனுபவித்தபின்
அநியாயமாய்
எரித்து
மீதமுள்ள
குற்றுயிரையும்
காலால் பறிக்கிறேன்

ஒரு தூக்கு தண்டனை
தியாகி போல
நீயும்
மெளனமாய்
ஏற்றுக் கொள்கிறாய்

இருந்தும் என்ன?
கடவுளுக்கா உன்னை
காணிக்கை
செய்யப் போகிறார்கள்
இந்த மானுட
ஜென்மங்கள்

அமைதியான
வீட்டுக்குள்
இன்று நடந்த
அந்த அரங்கேற்றம்

கண்மூடிய
தங்கை
கலைந்து போன
அனுபவிப்பில்
நான்
அரைகுறையாய்
ஆதரவேதுமற்று

இனி அம்மா
அப்புறம் அப்பா
ஒவ்வொருவராய்
உன்னை
முழுகச் சொல்வார்கள்
முடிந்தால்
கண்ணீர் விட்டு
கதறுவார்கள்

தெரியட்டும் அவர்களுக்கும்
நம் காதலின் ஆழம்
என்னவென்று.
பின்
விட்டுவிடுவேன்
இந்த
திருட்டு அங்கீகாரத்தை
ஆனால்
உன்னை மட்டுமல்ல!

5 comments:

said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by the author.
said...
This comment has been removed by the author.
said...
This comment has been removed by a blog administrator.