புகைத்தலின் பெண்மை

அன்று
தொலை நிலவாய்
தூர நின்று சிரித்தாய்
பின்
கொளுத்தெரிந்த என்
காம இச்சைக்கு
பலியானாய்
இன்று
நாளற உனை
பத்துமுறையாவது
முத்தமிடுகிறேன்
சில நேரம்
என் சொந்தக்
காதலி
முன்னாலே
இருந்தாலும்
போதவில்லை
மறந்துவிட அவள்
இறைஞ்சியும், அழுதும்
மறுத்துவிட்டேன்
தீர்க்கமாய்
உனை மறக்க
அடுத்தவனுக்கில்லை
என்னின்பம் என்று
அனுபவித்தபின்
அநியாயமாய்
எரித்து
மீதமுள்ள
குற்றுயிரையும்
காலால் பறிக்கிறேன்
ஒரு தூக்கு தண்டனை
தியாகி போல
நீயும்
மெளனமாய்
ஏற்றுக் கொள்கிறாய்
இருந்தும் என்ன?
கடவுளுக்கா உன்னை
காணிக்கை
செய்யப் போகிறார்கள்
இந்த மானுட
ஜென்மங்கள்
அமைதியான
வீட்டுக்குள்
இன்று நடந்த
அந்த அரங்கேற்றம்
கண்மூடிய
தங்கை
கலைந்து போன
அனுபவிப்பில்
நான்
அரைகுறையாய்
ஆதரவேதுமற்று
இனி அம்மா
அப்புறம் அப்பா
ஒவ்வொருவராய்
உன்னை
முழுகச் சொல்வார்கள்
முடிந்தால்
கண்ணீர் விட்டு
கதறுவார்கள்
தெரியட்டும் அவர்களுக்கும்
நம் காதலின் ஆழம்
என்னவென்று.
பின்
விட்டுவிடுவேன்
இந்த
திருட்டு அங்கீகாரத்தை
ஆனால்
உன்னை மட்டுமல்ல!
5 comments:
ரெண்டு மூண்டு தரம் மூழ்கித்தான் முத்தெடுத்தேன் உங்கள் கவிதையில்....
என்றாலும் உங்களுக்கு கொஞ்சம் துணிச்சல் அதிகம் போல....
இப்பெடிஎல்லாம் முரட்டுத்தனமாய் இருக்கிறீங்க
வித்தியாசமா இருக்கு
வாழ்த்துக்கள்.
திருட்டு அங்கீகாரத்தை...
மிகவும் நன்றாக வந்துவிழுந்துள்ளன புகையும் எண்ணங்கள்
best wishes for more lovely lines
மயாதி,
கடைசியில் முத்து கிடைத்துவிட்டதற்கு மிக்க மகிழ்ச்சி நண்பரே!
ஒரு Cigeratte-ஐ என் காதலியாய் வைத்துக் கொண்டு படியுங்கள் இந்தக் கவிதையை.
பிறகு சொல்லுங்கள் என்ன நினைத்தீர்கள் என்று.
வந்து போனதுக்கு நன்றி நண்பரே!
Dr. Rudhran,
விடமுடியாத புகைப் பழக்கத்தைப் பற்றி எழுதியது.
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிகள் பல.
அட்டகாசம் ;)
என்னோட பலிப்பைன்ஸ்தோழி ஒருத்தி சொன்னது நினைவுக்கு வருக்கிறது
நான் ;- எதுக்கு நீ சிகிரெட் படிக்கிற?
தோழி ;- வாழ்க்கையில அம்மா, அப்பா, கணவன், பிள்ளைங்கள், நண்பர்கள் இப்படி எல்லாமே அவர்களாக நினைத்தால் நம்மை விட்டு போயிடுவாங்க ஆனால் இது மட்டும் தான் (சிகிரெட்) நாம விட்டால் ஒழிய போகாது அதான் அதை பிடிக்கிறேன் என்றால் ;)
Post a Comment