நீ வருவாயென

ஒரே பக்கத்தை பத்து முறை
புரட்டிவிட்டேன்
நீ எங்கு இருக்கிறாய்?
நடக்கும் பாதையை
பார்த்து சலித்துவிட்டேன்
பரவியிருந்த நறுமணக்
கவழல் மரித்து நாளாகிவிட்டது
ஊர் கதைகள் மென்றபடி
தலை விலக்கி நோக்கினால்
மெதுவாய்ப் பயணிக்கிறார்கள்
உன் தோழிகள்
மிதிவண்டி
இப்படியும் அப்படியும்
செல்கிறது
உன் தங்கை
அனாசயமாக ஓட்டுகிறாள்
ஒரு வலிக்கு மருந்து
இன்னொரு காயம்
என்று சொல்கிறார்கள்
நீ இருந்ததைவிட
இப்போது அதிகமாய்
வலிக்கிறது என்று
தெரியாமல்.
பொறுமையாய் காத்திருக்கிறேன்
ஒரு குறிஞ்சிப் பூவைப்போல.
ஏனெனில்
நிஜசாயம் பூசப்பட்ட
பொய் பொம்மைகள்
வெளிறிவிடும் ஒருநாள்
என்ற நம்பிக்கையில்.
கிறுக்கன் என்று
கைசுட்டுவதில்லை
யாரும் இப்போதெல்லாம்!
5 comments:
நல்லாருக்கு... வாழ்த்துக்கள்...
நன்றி அண்ணாமலையாரே!
அருமைய்யா.. அரும!!
வந்து இளைப்பறிட்டு போனதுக்கு நன்றி கலையரசரே!
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment