Sunday, May 6, 2007

கவிதைகளை பிழைக்கவிடு!

வைக்கோல் போரினூடே
சிதறிக் கிடக்கும்
நெற்மணி துளிகளை
கொத்தி கொத்திப்
பொறுக்கும் பசிதாக்கமுற்ற
பட்சியாய்
தெரிவான வார்த்தைகளை
தொடுத்து நையப்பட்ட
கவிதையில்
விரல் இடுக்கினிடையே
கொம்புத் தேன்
ரசமாய் உருகி
வழியும் என் காதல்.

படிக்க நீ மறுத்தும்
ஒவ்வொரு வரியும்
உனைப் படிக்கும் புத்தகமாய்
செவிகளை நீ மூடிக்கொண்டும்
ஒவ்வொரு சொல்லும்
உனை ஒலிக்கும் சாகரமாய்
கண்களால் நீ உதாசீனத்தாலும்
உன் பேரழகை பதிவிக்கும்
வர்ணஜால ஓவியமாய்
காதலை நீ மரணித்தாலும்
அது உயிர்வாழும் அரும்படைப்பாய்
என் கவிதைகள் சீவித்திருக்க,
உன் மௌனத்தைக் கலைத்து
இல்லையென்று சொல்லி
என் காதலைக்
கொல்வதை விட
ஒரு பேசா மடந்தையாய்
இருந்துவிட்டுப் போ.
என் கவிதைகளாவது
பிழைத்துப் போகட்டும்!

0 comments: